மார்த்தாண்டம், ஜூலை 25 –
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ எம் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஏ.ஓய். ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினரால் கல்குளம் வட்டம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு தீவிர ரோந்து பணி நேற்று இரவு நடைபெற்றது.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வெள்ளிகோடு பகுதியில் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் வேகமாக வந்தது.
காரை நிறுத்தும் படி சைகை காட்டியும் நிற்காமல் சென்றதால், அதனை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் பின் தொடர்ந்து இரவிபுதூர் கடை என்ற இடத்தில் மடக்கி பிடித்தனர். அப்போது கார் ஓட்டுனர் தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 750 கிலோ பொது வினியோக திட்ட ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்த அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
இது போன்று அழகிய மண்டபம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்த போது ஆம்னி வேன் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமாக மண்ணெண்ணெய் வாசனையுடன் வந்து கொண்டு இருந்தது. அந்த வாகனத்தை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டி காட்டாத்துறை என்ற இடத்தில் மடக்கி பிடித்தும் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓட்டினார்.
சொகுசு காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 1,100 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. கைப்பற்ற பட்ட வெள்ளை நிற மண்ணெண்ணெய் தூத்தூர் சின்னதுறை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட சொகுசு கார்கள் இரண்டும் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



