கிருஷ்ணகிரி, ஜூலை 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிலையம் அருகே டாக்டர் அப்துல் கலாம் விவசாய சங்கத்தின் சார்பாக விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரிக்கை விடுத்து பொன்னுசாமி தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் காரப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வஜ்ரம் என்ற செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அதிமுக தொழில்நுட்ப மாவட்ட பொறுப்பாளர் தொழிலதிபர் தீபக், ஆர். கே. எஸ்.ராஜா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பூபதி ஞானப்பிரகாசம், சங்கர், செந்தில்குமார், கருமாண்டபதி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் அருள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



