நாகர்கோவில், மார்ச் 11 –
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள முன்னாள் ராணுவ வீரரர்கள், ஓய்வு பெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள், ஓய்வு பெற்ற காவல் துறை ஆளிநர்கள் மற்றும் ஒய்வு பெற்ற தீயணைப்பு துறை வீரர்கள் ஆகியோர் தற்காலிக பணிக்கு அழைக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், துணை இராணுவ வீரரர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள், ஒய்வு பெற்ற தீயணைப்பு துறை வீரர்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அல்லது முன்னாள் படை வீரர்கள் நல துணை இயக்குனர் அலுவலகம், நாகர்கோவில் அல்லது உங்கள் பகுதிக்குட்பட்ட அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகி விருப்ப மனுக்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


