கிருஷ்ணகிரி, ஜூலை 22 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளில் eKYC பணிமேற்கொள்ளாத 35,708 உறுப்பினர்களுக்கு 28,072026, 29.07.2026 மற்றும் 30.07.2026 ஆகிய மூன்று தேதிகளில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
கைரேகை பதிவு செய்ய முடியாத உறுப்பினர்கள் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் வயதான முதியோர்கள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாமில் ஆதார் அட்டையில் கைவிரல்ரேகை மற்றும் கருவிழி பதிவை புதுப்பித்த பின்னர் நியாயவிலைக்கடைகளில் eKYC பணிமேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், eKYC மேற்கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் இம்மாத இறுதிக்குள் நியாயவிலைக் கடைகளில் cKYC ஐ நிறைவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இறந்த உறுப்பினர்களின் பெயர்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பெயர்நீக்கம் செய்ய வேண்டும் அல்லது தங்களது பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்களிடம் இறந்த உறுப்பினர்களின் குடும்ப அட்டை எண் மற்றும் ஆதார் அட்டை எண் வழங்க வேண்டும். கைரேகை சரிபார்ப்பு முறை (Biometric Authentication) மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க இயலாத முதியோர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நபரின் (Authorized Proxy) விவரத்தினை உரிய இணையதளம் வாயிலாக பதிவு செய்துகொள்ளுமாறும், அங்கீகரிக்கப்பட்ட நபர் (Authorized Proxy) பதிவு செய்யப்பட்ட பின்பு கைரேகை சரிபார்ப்பு முறையில் பொருள் வழங்க இயலாதவர்களுக்கு Proxy Mode முறையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க இயலும். மேலும், பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான விவரங்களை TNePDS Mobile App னை பயன்படுத்தி அனைத்து மக்களும் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.



