தருமபுரி, ஜூலை 21 –
தருமபுரி நகரில் எஸ்.வி.ரோடு குப்பையன் தெருவில் உதயமரத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சொர்ண முத்து மாரியம்மன் திருக்கோவிலின் 37ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்து வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக 108 வேல் பூஜை மற்றும் விளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் நகர பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு வாழை இலையில், அரிசி, மஞ்சள், பல்வேறு வகையான பூக்களை வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
மேலும் இந்த விளக்கு பூஜையில் ஆன்மீக செம்மல், மகாகவி பாரதி, தங்கமகள் விருது பெற்ற த.ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு, வேல்மாறல் மகா மந்திரம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தனர்.



