சென்னை, ஜூலை 20 –
2027ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பிராமல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் முந்தைய ஆண்டை விட 67 சதவீதம் அதிகரித்து ₹461 கோடியாக பதிவாகியிருக்கிறது. நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு, சில்லறை கடன்கள் வழங்கலில் சிறப்பான வளர்ச்சி மற்றும் நிலையான சொத்துத் தரம் ஆகியவை இந்தச் சிறப்பான செயல்பாட்டுக்கும், அதிகரித்த லாபத்திற்கும் முக்கிய காரணங்களாக இருந்திருக்கின்றன.
வாடிக்கையாளர்களின் வலுவான தேவை வரவேற்பு மற்றும் சீரான வணிக வளர்ச்சியின் எதிரொலியாக, வழங்கப்பட்ட சில்லறை கடன்கள் முந்தைய ஆண்டை விட 44 சதவீதம் உயர்ந்து ₹12,527 கோடியாகப் பதிவாகியுள்ளது. நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு 25% அதிகரித்து ₹1.07 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேவேளையில், சில்லறைப் பிரிவின் சொத்து மதிப்பு 32 சதவீதம் வளர்ச்சி கண்டு ₹91,249 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ₹4,000 கோடி வரை புதிய நிதி திரட்டும் முன்வரைவு திட்டத்திற்கும் நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.
முதல் காலாண்டில் நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து பிராமல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் பிராமல் கூறியதாவது: “இந்தியாவில் உயர் அடுக்கிலுள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் பிராமல் ஃபைனான்ஸ் இந்தியா முழுவதும் சுமார் 60 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட சில்லறை வணிகக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹276 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்தார்.



