தூத்துக்குடி, ஜூலை 17 –
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 16) அதிகாலை 5.15 மணிக்குத் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் மீனவ மக்களுக்காகப் பங்குத்தந்தை தலைமையில் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. மதியம் 12 மணிக்கும் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சந்தியாகப்பரின் சொரூபம் குருசு ஆலயத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மாலை 6 மணிக்குக் கோவிலை வந்தடைந்தது. இரவு 7.15 மணிக்குக் கொடிகள் மந்திரிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, மறையுரையும் நற்கருனை ஆராதனையும் நடந்தது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கும் 6.30 மணிக்கும் திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருனை ஆராதனையும் நடக்கிறது. ஜூலை 21ம் தேதி அன்னதானம் நடைபெறுகிறது. ஜூலை 25ம் தேதி 10ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி, காலை 5.10 மணி, காலை 5.50மணி, காலை 7 சிறப்பு திருப்பளி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தேர்பவனியாக ஆலயத் திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதியுலா வருகின்றனர். 12 மணிக்கு சிறப்பு திருபயணிகளுக்காக திருபலியும் நடக்கிறது.
ஏற்பாடுகளை குருசுகோவில் பங்குதந்தை, அருட் சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், இறைமக்கள் செய்து வருகின்றனர். பெரியதாழை, உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, கூடுதாலை, தூத்துக்குடி, அமலிபுரம், கடலோர மீனவமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.



