நாகர்கோவில், ஜூலை 15 –
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் சார்பில் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மத்திய மாவட்டத் தலைவர் குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ம. கோபுராஜ் முன்னிலை வகித்து, கர்மவீரர் காமராஜர் அவர்களின் கல்விப் புரட்சி, நேர்மை, எளிமை மற்றும் மக்கள் நலப் பணிகளை நினைவுகூர்ந்து அவரது புகழுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் இளைஞர் அணி தலைவர் திலீப், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சரண் காந்தி, நிர்வாகிகள் மணிகண்டன், கார்த்தி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



