தஞ்சாவூர், ஜூலை 13 –
தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 679மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் வழங்கினர்
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து திருவையாறு வட்டம் மேல திருப்பந்துருத்தியை சேர்ந்த அப்துல் சலாம் ஹாஜா மொய்தீன் என்பவர் ஐக்கிய அரசு அமீரகத்தில் பணிபுரிந்து இறந்ததையடுத்து அவருக்கு சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத் தொகை ரூபாய் 1,02,90,622 க்கான காசோலையினை ஜரின் ஹூதா அவர்களிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மேலும் நாஞ்சிக்கோட்டை பகுதியினை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சலவை பெட்டி கேட்டு விண்ணப்பித்த இன்றே மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சவுமியா, அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.



