தூத்துக்குடி, ஜூலை 11 –
கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பராபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.
கடம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவீந்திரன் வழக்கு பதிவு செய்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிகடையில் விற்பனைக்காக வைத்திருந்த சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் கனகராஜ் (43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்.



