மதுரை, ஜூலை 10 –
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் பத்மநாப நாயுடு, செயலாளர் ராமசாமி கவுண்டர் உட்பட பால் உற்பத்தியாளர்கள் நல சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு கோருதல், ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளில் பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே பாலின் அளவும் தரமும் பரிசோதிக்கப்படும் ஒப்புகைச் சீட்டு வழங்கி அதன் அடிப்படையில் உற்பத்தியாளர்களுக்கு பால்பட்டு வாடா செய்திட வேண்டுதல் ஆவின் பால் தரப்பரிசோதனையில் MRF முறையை கைவிட்டு ISI தர பரிசோதனை முறையை அமல்படுத்த வேண்டும்.
ஆவினுக்கு பால் வழங்கும் அனைத்து கறவை மாடுகளுக்கும் 75% கட்டண சலுகையில் கால்நடை காப்பீட்டு திட்டம் வழங்க வேண்டும். மூன்றடுக்கு முறையிலான ஆவின் பால் கூட்டுறவு கிராம அமைப்பு சங்க பணியாளர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும். தொகுப்பு பால் குளிர்விப்பான் பணியாளர்களை மாவட்ட ஒன்றிய பணியாளர்களாக பணி உயர்த்துதல் (or) புதிய பணியாளர்களை வேலைவாய்ப்புகள் மூலம் தேர்வு செய்தல் மாநில இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் அரசின் பங்கு முதலீடுகள் ஏற்கப்படுவதை தவிர்க்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறையில் திருத்தம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக அரசுக்கு முன் வைக்கப்பட்டது.



