தஞ்சாவூர், ஜூலை 8 –
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவனே, மாணவியே, நீ தலைவன் ஆகணும் என்ற நூல் வெளியீட்டு மற்றும் அறிமுக விழா மருது பாண்டியர் கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவில் மருது பாண்டியர் கல்லூரி துணை முதல்வர் தங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். மருது பாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவரும், செயலாளரும் நிர்வாக அறங்காவலருமான மருது பாண்டியன் நூலை வெளியிட்டு பேசினார்.
நூலாசிரியரும் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தலைவருமான சுவாமி விமூர்த்தனந்தா ஏற்புரை ஆற்றினார். இதில் மருது பாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, கல்வியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் ஒருங்கிணைப்பாளர் மதுக்கிருத்திகா, பிளாசம் பப்ளிக் பள்ளி மற்றும் பிளாசம் புழு பெல்ஸ் அகாடமி நிறுவனர் அழகு. அழகப்பன், தாமரை பன்னாட்டு பள்ளி முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், எனிக்ஸ டெக்னாலஜி இந்தியா பிரைவெட் நிறுவனத் தலைவர் ராம் பிரகாஷ், சரஸ்வதி மஹால் நூலக தமிழ் பண்டிதர் மணிமாறன், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மருது பாண்டியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்ய பிரபா நன்றி கூறினார்.



