திருப்பூர், ஜூலை 6 –
திருப்பூர் மாநகரம் வடக்கு தெற்கு பகுதியில் உள்ள சிக்கண்ணா கல்லூரியில் 300 மாணவ- மாணவிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
காவல் உதவி ஆணையாளர் ஏ.சேகர் போக்குவரத்து பிரிவு, திருப்பூர் மாநகரம், சிக்கண்ணா கல்லூரி முதல்வர் வி.கிருஷ்ணன், போக்குவரத்து துணை தலைமை காப்பாளர் வாசுதேவன், காவல் உதவி ஆணையர் அ. சேகர் பேசியது: நாம் தினசரி பயன்படுத்தும் சாலைகளில் பாதுகாப்பாக செல்வது பற்றியும், மாணவர்கள் அனைத்துப் போக்குவரத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும், அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. மாணவர்களின் லட்சியங்கள், கொள்கைகள், கல்வி மூலம் தொழில்கள், வேலைவாய்ப்பு பெற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு முதலில் நம் உடலில் உயிர் இருக்க வேண்டும் & நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
உங்கள் கவனம் கல்வியில் மட்டும் இருக்கவேண்டும் என விளக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் எந்த வடிவிலும் போதை பொருளை வாங்கவோ, விற்கவோ & பயப்படுத்தவோ கூடாது. அதனால் நமக்கும் & நம் குடும்பத்திற்கும் ஏற்படும் தீமைகளை மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என்றும் விரிவாக மாணவர்களுக்கு சொல்லப்பட்டது. இதில் 300 இருபால மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



