தென்காசி, ஜூலை 6 –
தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் we the leadar என்கின்ற மக்கள் இயக்கத்தை தொடங்கினார். அந்த அமைப்பில் 19 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் வாரியாக உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இயக்கத்திற்கான உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தென்காசி நகரின் மங்கம்மா சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைப்பின் முக்கிய நிர்வாகியான கரு.நாகராஜன் பங்கேற்று உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கரு.நாகராஜன் தெரிவித்ததாவது: We The leadar மக்கள் இயக்கத்தை 3 வாரங்களுக்கு முன்பு அமைத்தார். தமிழ்நாட்டில் மக்கள் மனதில் இடம் பிடித்து 19 லட்சம் உறுப்பினர்களை கொண்ட அமைப்பு. அண்ணாமலை மீது மக்கள் எப்படிபட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. மக்கள் சுய விருப்பத்தோடு இணைந்து இருக்கிறார்கள். சேருபவர்கள் ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை. இதை எளிமைபடுத்தும் வகையில் மிஸ்டு கால்டு முறையில் பதிவு செய்யும் வகையில் மாற்றுத் திட்டத்தை தலைவர் அறிவிப்பார்.
இங்கு வந்து இருப்பவர் ஒரு கட்சியை சார்ந்தவர்களோ, ஒரு பிரிவை சேர்ந்தவர்களோ இல்லை அனைத்து தரப்பு அரசியல் கட்சியினர் சமூக அமைப்பினர் என அனைத்து தரப்பு மக்களும் இருக்கிறார்கள். உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் இந்த ஆலோசனை கூட்டம் மாவட்டங்கள் தோறும் நடத்தப்படுகிறது. பொள்ளாச்சியில் வருகிற 12ம் தேதி மக்களை அண்ணாமலை சந்திக்கும் வகையில் கூட்டம் நடத்தப்படுகிறது. திருச்செந்தூரில் வருகிற 26-ம் தேதி பொதுக்கூட்டம். செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் கூட்டம். வருகிற ஆகஸ்ட் 16 சென்னையில் மிகப்பெரிய மாரத்தான் ஓட்டம் அண்ணாமலை தலைமையில் நடக்கிறது.
இந்த அமைப்பு பொதுமக்களிடம் விழிப்புணர்வு மக்களுக்கு சேவை செய்யும் வகையில் செயல்படும். விரைவில் அரசியல் அமைப்புகளாக மாறும். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக மாறுவதற்கு இது போன்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. 50 லட்சம் உறுப்பினர் சேர்ந்த பிறகு அரசியல் கட்சியாக மாற்றப்படும். இடைத்தேர்தல் பற்றி நமக்குத் தெரியாது. இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறுமா எனத் தெரியவில்லை. நாங்கள் இடைத்தேர்தலில் நிற்கப் போவதில்லை.
நமது இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 66 ஆயிரம் பேர் பதிவு செய்த நிலையில் இப்போது 78 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 1,31,400 உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட we the leadar அமைப்பு தயாராக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மக்களுக்காக பாடுபட 42 வயதில் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது அண்ணாமலை தான். முதல்வர் விஜய் 52 வயது. உதயநிதி ஸ்டாலினுக்கு 55 வயது. இவர்கள் இளைஞர்களா.
அனைத்து மக்களையும் விரைவில் அண்ணாமலை சந்திப்பார். தவெக ஆட்சியில் 50 நாட்களில் நல்லதும் நடந்த இருக்கு தவறும் நடந்து இருக்கு. வெள்ளை அறிக்கை ஏன் வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை. மக்கள் வெள்ளை அறிக்கையை கேட்கவில்லை. அறிவித்த திட்டம் எங்கே என்று கேட்கிறார்கள். பாலியல் மற்றும் படுகொலை 50 நாளை விட அதிகமாக நடந்து இருக்கிறது.
அமைச்சரே போதை பொருள் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறார். குற்றச்சாட்டு எழுகிறது என்றால் அவரை பதவி நீக்கம் செய்வது தவறு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் நிகழ்ச்சி அமைப்பாளர் டாக்டர் அன்புராஜ், யோகா டவர் சேகர், ஆறுமுகம் என்ற முருகேசன், நாகராஜ், ராஜசேகர பாண்டியன், கந்தசாமி, முத்துக்குமரன், மாடசாமி, முருகன், முத்துச் செல்வன் மற்றும் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



