கோவை, ஜூலை 04 –
கோவை திருச்சி சாலை வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத்தில் ஓபிசி சமுதாயங்களை சேர்ந்த சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவர்களுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓபிசி நிர்வாகிகள், உதவித் தொகையை வாங்கிய பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதை அடுத்து வருகின்ற 12. 07 .2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நமது இயக்கம் நடத்துகின்ற ஒரு கருத்தரங்கம்” ஓபிசி மக்களின் இன்றைய நிலையும் ஜாதிவாரி கணக்கெடுப்பும் “-என்ற தலைப்பில் மிகப்பெரிய ஒரு நிகழ்வு சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள இ.என். சேஷ மகாலில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் அகில இந்திய தலைவர்கள் சூரஜ் மண்டல் (மண்டல் கமிஷன் B.P. மண்டல் அவர்களுடைய பேரன்) அகில இந்திய ஓபிசி மாணவர்கள் சங்கத்தின் தேசிய தலைவர், டிஆர்.கிரண்குமார், அசோக் வரதன் ஷெட்டி ஐஏஎஸ் மற்றும் மாநில பிஜேபி தவெக, திமுக, அதிமுக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.



