By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம்: திருச்சி கூட்டத்தில் தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம்: திருச்சி கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடுதிருச்சி

பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம்: திருச்சி கூட்டத்தில் தீர்மானம்

Last updated: July 4, 2026 1:26 pm
July 4, 2026
12 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 4 –

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் பி. முருகானந்தம் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் மு.கு.பழனிபாரதி, மாநில பொதுச்செயலாளர் ம. கோதண்டம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கிப் பேசினர்.

இதில் மாநில பொருளாளர் சா.சுரேஷ், மாநில இணை பொதுச் செயலாளர் மே.மரகதலிங்கம், மாநில தலைமை நிலைய செயலாளர் சி.முத்துக்குமரன், மாநில துணைத் தலைவர்கள் இரா. கண்ணையன், ஜி. அருணகிரிமுருகன், கி.முருகேசன், கா.இளங்கோவன், மாநில செயலாளர்கள் வீ. கோவிந்தராஜன், கே.இராமர்பாண்டியன், ஏ. மோகன், தா. உமாபதி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

தமிழக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 24,000 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து கேரளா போன்று அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் இதர பணப்பயன்கள் வழங்க வேண்டும். காலி பாட்டில் வாங்க தனி முகமை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு வயதை 60-ஆக உயர்த்துவதோடு, மதுபான கூடமின்றி மதுக்கடைகள் அரசின் சொந்த கட்டிடத்தில் இயங்க வழிவகை ஏற்படுத்த வேண்டும்.

எப்எல் 2 தனியார் மதுக்கூடங்களில் உரிய அதிகாரிகளை தவிர மற்றவர்கள் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அச்சுறுத்துவது போன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதேபோல தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளிலும், டாஸ்மாக் பணியாளர்களை தாக்குவது, வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இதே போல டாஸ்மாக் நிர்வாகம் வழக்கை தொடுத்து பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 14 மாவட்டங்களில் 4 நாட்கள் தொடர் கடை அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டபோது அதைத் தொடர்ந்து மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் சங்கப் பிரதிநிதிகளை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அழைத்து பேசி 30 நாட்களுக்குள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை எவ்வித கோரிக்கையும் நிறைவேறவில்லை.

ஆகவே, இதனை வலியுறுத்தி வருகிற ஏழாம் தேதி தமிழகத்தில் உள்ள 5 முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், அடுத்த கட்டமாக ஜூலை – 10ம் தேதியன்று தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மற்றும் டாஸ்மாக்கில் உள்ள தோழமை சங்கங்களின் கூட்டமைப்போடு இணைந்து நடத்தவுள்ளது என தீர்மானிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136ம் ஆண்டு பிறந்தநாள் விழா
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மருதுபாண்டியருக்கு வெண்கல உருவச்சிலை

October 28, 2024
49 Views
விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு
மக்கள் குறைதீர்க்கும் நாள்
மாவட்ட கேரம் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account