தஞ்சாவூர், ஜூன் 26 –
தமிழக முதலமைச்சர் விஜய் 52வது பிறந்த நாள் முன்னிட்டு தஞ்சாவூர் இராசா மிராசுத்தார் மருத்துவமனையில் 5 குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசும், 100 குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம், புத்தாடை, டவல் ஆகியவற்றை தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் வழங்கினார். தஞ்சை மத்திய மாவட்ட கழக துணை செயலாளர் முருகேசன் மற்றும் தஞ்சை மத்திய மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி இணை ஒருங்கிணைப்பாளர் சுறா சுரேஷ் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மணிமேகலா, அரசு இராசு மிராசுதார் மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர். அமுதவடிவு, மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் தஞ்சை மத்திய மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.



