தஞ்சாவூர், ஜூன் 25 –
தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏ ஐ டி யு சி உள்ளாட்சி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில் தூய்மை பணி மற்றும் ஓட்டுநர் பணிகளை தனியாருக்கு விடும் அரசின் அறிவிப்பை கண்டித்தும் தூய்மை பணிமற்றும் ஓட்டுநர் பணிகளை தனியாருக்கு விடக் கூடாது என வலியுறுத்தியும், தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஊதியம் ஏற்றுக்கொண்டபடி ரூபாய் 762 வீதமும், ஓட்டுநருக்கு ரூபாய் 802 வீதமும், வழங்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். நிர்வாகிகள் கலியபெருமாள், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திர குமார் தொடங்கி வைத்தார். உள்ளாட்சி சங்க மாநிலத் துணைத் தலைவர் தர்ம கருணாநிதி நிறைவுறையாற்றினார். ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலர் துரை மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலர் முத்துக் குமரன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



