தஞ்சாவூர், ஜூன் 18 –
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் சி நா.௴.உபயதுல்லா 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் புகழ் மலர் வெளியீட்டு விழாவும் தஞ்சை முத்தமிழ் மன்றம் சார்பில் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் பல்கலைக் கழகம் முன்னாள் பதிவாளர் கு.வே. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். புகழ் மலரை திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி வெளியிட, அதை திருச்சி தமிழ் இலக்கியகம் அருள் தந்தை அமுதன் அடிகளார்களும், சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவரும் தமிழ் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தருமான ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.
திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், துணை மேயர்கள் டாக்டர் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்) சு.ப தமிழழகன் (கும்பகோணம்) முன்னாள் மேயர் சண் ராமநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் இறைவன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வம், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார், மாவட்ட தலைவர் அமர்சிங், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே, பாம்பே ஸ்வீட்ஸ் சுப்பிரமணிய சர்மா, மகாராஜா நிறுவனங்கள் ஆசிப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இசையரங்காக சாலியமங்கள் ராமதாஸ் குழுவினர் வீணை இசையும் இசையரங்கமும், கலை நிகழ்ச்சியாக மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் சடையார் கோவில் நாராயணசாமி குழுவினரின் கோலாட்ட நிகழ்ச்சியும், இசையஞ்சலியாக வளர்ப்பக்குடி வீர சங்கரும், கவியரங்காக கவிதை பித்தன் தலைமையில் புவியிற்சிறந்த மாமனிதருக்குப் புகழஞ்சலி தஞ்சை இனியன், கவிஞர் இளங்கோவன், வல்லம் தாஜ்பால், தமிழ் மணி திருவள்ளுவர், கவிஞர் ராகவ் மகேஷ், கவிஞர் மரிய எட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் முத்தமிழ் மன்ற பொதுச் செயலாளர்புலவர் கோபாலகிருஷ்ணன், அனைவரையும் வரவேற்றார். நிறைவாக முத்தமிழ் மன்ற தலைவர் சி.நா.மீ.உ பரிதா பேகம் நன்றி கூறினார்.



