தஞ்சாவூர், ஜூன் 18 –
தமிழக முதல்வர் தேர்தலில் அளித் த வாக்குறுதியின் படி மாற்றுத் திறனாளிகளின் சுய உதவி கடன்க ளை தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்று த்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட கலெக்டர் ரேவதி தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்று திறனாளிகள் வலியுறுத்தி ய கோரிக்கைகள்: மாற்றுத்திறனாளிகள் பேட்டரி ஆட்டோ வாங்க மத்திய அரசின் மானியத்துடன், மாநில அரசு கூடுதலாக மானியம் வழங்க வேண்டும், தமிழக அரசின் பொது சேவை மையத்தை வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
வருவாய்த்துறை மூலம் உதவித் தொகைக்கு புதிதாக பதிவு செய்த வர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 ஜோடி கையுறை வழங்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்பட்ட வணிக வளாகங்களில் 5 சதவீத கடைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்று திறனாளிகள் பெற்றுள்ள அனைத்து வித சுய உதவி கடன்களையும் தள்ளுபடி செய்வதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தலில் வாக்குறுதி தெரிவித்தார். இதற்கான அறிவிப்பை புதிய நிதி நிலை அறிக்கையில் முதல்வர் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
கூட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, ஒருவருக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது தையல் இயந்திரம் வேண்டி 2 மாற்றுத் திறனாளிகள் தாய்மார்கள் மனு அளித்தவுடன் மாவட்ட கலெக்டரின் சிறப்பு நிதியிலிருந்து இருவருக்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், பயிற்சி கலெக்டர் ரமேஷ், தனித்துணை ஆட்சியர் சௌமியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



