திருச்சி, ஜுன் 11 –
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சிறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, பெரு விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
கடன் தள்ளுபடி உடனடியாக செய்யப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்தனர்.



