திருப்பத்தூர், ஜூன் 10 –
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கனவாய்புதூர் பகுதியைச் சேர்ந்த திருமலை (27), பெற்றோர் இறந்ததால் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் மன உளைச்சலால் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



