சிவகங்கை, செப். 29 –
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு – || (தொகுதி II-, தொகுதி II A) தேர்வு நேற்று நடந்தது. சிவகங்கை வட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: சிவகங்கை தேவகோட்டை, காரைக்குடி ஆகிய ஊர்களில் 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன .
சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட 3 மண்டலங்களில் மொத்தம் 8,749 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பபட்டதில், 6,727 (77%) தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 2,023 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. மேலும், தேர்வு மையங்களை கண்காணித்திட 7 நடமாடும் கண்காணிப்புக் குழுக்களும், 4 பறக்கும் படை குழுக்களும், 30 அறை கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



