தஞ்சாவூர், ஜூன் 8 –
தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கவும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 493 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். இம்மனுக்களை பெற்றுக் கொண்டு, மனுக்கள் மீது நடவடிக்கையை உடனடியாக எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ரேவதி உத்தரவிட்டார்
அதனைத் தொடர்ந்து பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகம் சார்பில் 9 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திருமணம், கல்வி, பணியிடத்தில் விபத்து, மரணம் மற்றும் ஓய்வூதியம் என ரூபாய் 14,62,400 மதிப்பிலான நலத்திட்டங்களுக்கான ஆணையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் நீர் நிலைகளை தூய்மை ப்படுத்தும் சவால் -2026 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி , வல்லம் பேரூராட்சி, சேதுபாவாச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாரியம்மன் கோவில் ஊராட்சி, கவின்மிகு தஞ்சை இயக்கம், விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை, திரு தொண்டர் அறக்கட்டளை, ஜோதிமணி இறைப்பணி, திருக்கூட்டம், திருவையாறு பசுமை குழுமம் மற்றும் எஸ் ஆர் ராஜதீபன் சக்கரவர்த்தி ,அரசு துறைகள் மற்றும் தன்னார்வ குழுக்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுரேஷ் கார்த்திக் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சௌமியா ,உதவி ஆணையர் (கலால்) ரேணுகா தேவிமற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



