குளச்சல், ஜூன் 5 –
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் பிரிட்டோ (46). இவர் வெள்ளமோடி பகுதியில் எலக்ட்ரிக் பைக் எனப்படும் இ பைக் ஷோரூம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தாமஸ் பிரிட்டோ கடந்த மாதம் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் 21 இ பைக்குகளை வாங்க ஆர்டர் செய்தார். இதற்காக அவர் கோவை நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு மூன்று தவணையாக ரூபாய் 12 லட்சம் வரை அனுப்பியுள்ளார். இதை அடுத்து கடந்த 1ம் தேதி வெள்ளமோடிக்கு லாரியில் இ பைக் கொண்டுவரப்பட்டன. ஆனால் 21 பைக்குளுக்கு பதிலாக 11 பைக்குகள் காணப்பட்டன.
இதனால் தாமஸ் பிரிட்டோ பைக்கை இறக்காமல் கோவையில் உள்ள நிறுவன அதிகாரிகளுக்கு போன் செய்தார். ஆனால் அங்கிருந்து சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். மேலும் சில நாட்களில் பைக்குகள் வந்து விடும் என கூறி காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதை அடுத்து தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தாமஸ் பிரிட்டோ இது குறித்து வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் 21 இ பைக்குகளுக்கு பதிலாக 11 பைக்குகளை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு, மீதி 10 பைக்குகளை அனுப்பாமல் பண மோசடி செய்த கோவை பைக் நிறுவனத்தை சேர்ந்த சுஜித் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


