தருமபுரி, ஜூன் 03 –
தருமபுரி நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 103வது பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆ.மணி எம்பி தலைமையில் தருமபுரி நான்கு ரோடு அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், கேக் வெட்டியும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் தர்ம செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, கழக பேச்சாளர் டி.ஏ.ரவி, நகரத் துணைச் செயலாளர் வ.முல்லவேந்தன், நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், கனகராஜ், பொன்.மகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



