கிருஷ்ணகிரி, மே 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்குமாறு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல்.சுப்பிரமணியன் தனது சொந்த நிதியில் இருந்து காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தாகத்தினை தீர்க்கும் வகையில் ஆழ்த்துளை கிணறு அமைத்து கொடுத்துள்ளார்.
சிறப்பாக பள்ளிக்கு ஆழத்துளை கிணறு அமைத்து கொடுத்த காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரின் தியாகத்தினை போற்றும் விதமாக காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் அருண் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் பெருமாள் மற்றும் அந்தப் பள்ளியில் பயின்று வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் பள்ளியின் சார்பில் நன்றியினை தெரிவித்து கொண்டனர்.



