கோவை, மே 22 –
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கே. நித்தியானந்தன் அவர்களை முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு.இக்பால், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், மாநில நிர்வாகிகள் சந்தோஷ் மற்றும் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



