திருச்சி, மே 22 –
திருச்சி வேலக்குறிச்சியைச் சேர்ந்த சக்திவேல், நேற்று முன்தினம் (மே 20) இரவு மனைவி செல்வி மற்றும் ஆறு மாத கைக்குழந்தையுடன் பைக்கில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். அப்போது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், சக்திவேல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



