திருச்சி, மே 19 –
மணப்பாறையிலிருந்து கரூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டெப்னி டயர் வெடித்தது. இதனால் மேற்கூரையில் ஓட்டை விழுந்து அதில் பயணித்த ஐந்து பயணிகள் லேசான காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



