தருமபுரி, மே 18 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: தருமபுரி வருவாய் போக்குவரத்து அலுவலகம், பாலக்கோடு அலுவலகம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட 104 தனியார் பள்ளிகளுக்கான 894 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வுக்கு கொண்டு வரப்படாத பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் அந்த வாகனத்தை இயக்க தடை பிறப்பிக்கப்படும்.மாவட்டத்தின் அனைத்து பள்ளி வாகனங்களும் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய தேவராஜ், தருமபுரி கோட்டாட்சியர் பண்டரிநாதன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் அசோக் குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜேஷ் கண்ணா, தரணீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



