புதுக்கடை, மே 16 –
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவரத்தினம் மகன் அபிஷேக் (20) இவர் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் கீழ்குளத்திலிருந்து தேங்காப்பட்டணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆயினிவிளை பகுதியில் சாலைக்கு எதிரில் மற்றொரு இரு சக்கர வாகனத்துடன் நின்றிருந்த நபர் திடீரென திருப்பியபோது அபிஷேக் இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளது. இதில் அபிஷேக் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை உடனடியாக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


