திருச்சி, மே 16 –
திருச்சி மாவட்டம் கீரிப்பட்டியைச் சேர்ந்த ஜெயபால், அக்கம் பக்கத்தினர் மீது ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது தொடர் குற்றச் செயல்களைத் தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மத்திய சிறையில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான ஆவணம் வழங்கப்பட்டது. இது அவரது குற்றச் செயல்களுக்கு ஒரு தடையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


