தேனி, மே 15 –
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மத்திய சங்கம் கார்த்திக் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சபரி ஐங்கரனுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செய்தும், மகுடம் சூட்டியும், பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கிளை மேலாளர் சரவணக்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது பணிமனையில் தொழிற்கூடம் வளாகப் பகுதியில் சிமெண்ட் தளம் மேற்கொள்ளவும், சுகாதார வளாகத்தை சீரமைத்திடவும், போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் பணிபாதுகாப்பிற்கு வழிவகை மேற்கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது கிளை நிர்வாகி ராஜ்கமல், போடி கிளை அலுவலக உதவியாளர் முத்துச்செல்வம் மற்றும் போக்குவரத்துக் கழக பணிமனை பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் உடனிருந்தனர்.



