கிருஷ்ணகிரி, மே 8 –
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் பயின்ற மாணவி மோனிஷா பிரித்தி, சோபியா, கௌசல்யா ஆகிய மூன்று மாணவிகளும் 589/600 மதிப்பெண் பெற்று முதலிடமும், சுப்ரியா 587/600 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், முன்னிலா தேவா 585/600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவ, மாணவிகளும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவ, மாணவிகளும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 62 மாணவர்களும் பெற்றுள்ளனர். கணிணி பயன்பாடு பாடத்தில் 1 மாணவன் 100/100 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் பாடவாரியாக தமிழில் 27 மாணவர்களும், ஆங்கிலத்தில் 15 மாணவர்களும், இயற்பியலில் 16 மாணவர்களும், வேதியியலில் 20 மாணாக்கர்களும், உயிரியல் பாடத்தில் 10 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 5 மாணவர்களும், பொருளியல் பாடத்தில் 4 மாணவர்களும், கணக்கு பதிவியல் பாடத்தில் 5 மாணவர்களும் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி, கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பள்ளியின் செயலாளர் டாக்டர்.சந்தோஷ் பாராட்டி வாழ்த்தினர். பள்ளியின் முதல்வர் நசீர் பாஷா, துணை முதல்வர் பெரியண்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகளை பாராட்டினர்.



