விளாத்திகுளம், மே 05 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விளாத்திகுளம் வடக்கு மண்டல் சார்பாக பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையிலும், ஒன்றிய தலைவர் ஆர்.காட்டு ராஜா முன்னிலையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



