திருச்சி, ஏப். 30 –
மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று நள்ளிரவு திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயிலில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர் மூட்டையுடன் சென்றார். சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் மூட்டையை சோதித்தபோது, அதில் 25 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு கஞ்சாவை வழங்கியது யார், அவர் எங்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


