திருச்சி, ஏப்ரல் 25 –
திருச்சி இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான அண்ணாதுரை, நரம்பியல் கோளாறு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 22ம் தேதி சிகரெட் பிடிக்க தீப்பெட்டியை பற்ற வைத்தபோது, அவரது ஆடையில் தீப்பிடித்து 65 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு சமயபுரம் போலீசார் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


