திருச்சி, ஏப்ரல் 24 –
திருச்சி கிழக்கு, மேற்கு, திருவரம்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் சீல் வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை வீடியோ எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்களை, காவல்துறை துணை ஆணையர் சிருஷ்டி சிங் ஒருமையில் ‘ஏய்’ என அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



