தேனி, ஏப்ரல் 20 –
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பகுதியில் அமைந்துள்ள தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் (19.04.2026) நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ரஞ்ஜீத் சிங் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டனர். வாக்கு எண்ணும் நாளில் எந்தவித குறையும் இல்லாமல் சீரான முறையில் பணிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.



