மார்த்தாண்டம், ஏப். 18 –
பேச்சிப்பாறை அருகே சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் அருள் தாஸ் (49) மற்றும் செந்தில் (45). இவர்கள் மரம் வெட்டும் தொழிலாளர்கள். இன்று காலை இருவரும் பைக்கில் வேலைக்கு சென்றனர். அப்போது சுடலிக் காடு என்ற பகுதியில் செல்லும்போது, காட்டில் இருந்து வெளியே வேகமாக வந்த காட்டெருமை ஒன்று பைக் மீது பலமாக மோதியது.
இதில் அருள் தாஸ், செந்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகள், அக்கம்பக்கத்தினர் மீட்டு குலசேகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். களியல் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



