By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

Last updated: March 25, 2026 2:02 pm
March 25, 2026
18 Views
Share
SHARE

குளச்சல், மார்ச் 25 –

நித்திரவிளை அருகே உள்ள தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் யுஷானி (26). இவருக்கும் இனயம் பகுதியை சேர்ந்த ஏபர் காட் டைபன் (37) என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கணவர் தென்னாப்பிரிக்காவில் வேலை பார்த்து பார்த்ததால் யுஷானியும் வெளிநாட்டில் தங்கியிருந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, யுஷானி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

இதை அடுத்து அவர் குழித்துறை கோர்ட்டில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 2023ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 30 பவுன் தங்க நகையும், ரூ.5 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தனர். திருமணத்திற்கு பிறகு கணவர் என்னை தென்னாப்பிரிக்காவில் அழைத்துச் சென்றார். அங்கு சென்ற பிறகு போதை பொருட்கள் உபயோகப்படுத்தி என்னை துன்புறுத்த தொடங்கினார். மேலும் செல்போனில் ரீல்ஸ் எடுக்கவும் வற்புறுத்தினார்.

நானும் கணவரின் விருப்பப்படி ரீல்ஸ் எடுக்க சம்மதித்தேன். இதன் மூலம் வந்த பணத்தை எனக்கு தராமல் அபகரித்தார். பின்னர் மகள் பிறந்த பிறகு மேலும் ரூபாய் 10 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கூறினார். இதை அடுத்து அங்கிருந்து கோவாவுக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்றிருந்த போது அங்கு ரீல்ஸ் எடுக்க வற்புறுத்தினர். நான் சம்மதிக்காததால் அடித்து துன்புறுத்தினார். இதற்கு எனது கணவர் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தனர்.

மேலும் தொடர்ந்து சித்திரவதை செய்தால் குழந்தையுடன் எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். என்னுடைய நகைகள், துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கணவர் வீட்டில் தான் உள்ளன. கேட்ட பிறகு அவற்றை தர மறுக்கிறார்கள். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த குழித்துறை கோர்ட் உத்தரவிட்டது. அதன் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா விசாரணை நடத்தி யுஷானியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தின் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கவிஞர் குமரி ஆதவன் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா
பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு
நாகர்கோவில் “வந்தே பாரத் ” ரயில் சேவை
சுசீந்திரத்தில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகை கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை

October 3, 2024
50 Views
ஸ்ரீ மருதவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
பெரியகோவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ25 கோடி
ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு
கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் 2 ஆம் நாள் ஜமாபந்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account