திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 12 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணக்குப்பம் கூட்ரோட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பி.வி.ஆர்.விசுவநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் முத்து சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார். இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி வழங்கினார்.
இதில் ஜெயச்சந்திரன், கை.ரா.சடகோபன், ஓம்சிவசக்திவேல், ஜோதி, பக்தவச்சலு, மோகன், மோகன்ராஜ், நிர்மல்ராஜ் கிருஷ்ணராஜ், வெங்கடேசன், பீரங்கி குணா, பாக்கியராஜ், பரசுராமன், உதயசூரியன், சோமசுந்தரம், ஜெயபால் சிவஞானம், கேசவன் நாகப்பன், ஜெயராமன், பிரபு, முத்துகிருஷ்ணன், அன்பழகன் சரவணன், ரமேஷ், அரசக்குமார், முருகவேல், பழனிச்சாமி, புஷ்பராஜ், சந்துரு, அஜித்குமார், பஜித், சாரங்கபாணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



