கிருஷ்ணகிரி, ஜூலை 11 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வருகை தரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பிக்கு சிறப்பான வரவேற்ப்பு கொடுக்க காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து வரவேண்டும் மாவட்ட தலைவர் எம்.சி. ரகு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எம்.சி.ரகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகருக்கு வருகை தந்து
நீட் தேர்வால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் வெற்றியானந்தனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் நீட் தேர்வின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலை எப்படி தடுப்பது என்பது குறித்தும் எடுத்துரைக்க ஓசூர் மாநகரத்திற்கு ஜுலை 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 மணி அளவில் வர உள்ளார். ஆகையால் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் சுமார் இரண்டு மணி அளவில் நமது கிழக்கு மாவட்ட அலுவலகமான காமராஜர் பவன் அருகில் ஒன்றிணைந்து சுமார் இரண்டு மணிக்கு ஓசூரை நோக்கி செல்வோம்.
ஆகையால் அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் தவறாமல் சரியான நேரத்தில் ஒன்று கூடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று எம்.சி.ரகு தெரிவித்துள்ளார்.



