திருப்பூர், மார்ச் 9 –
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தலைவர் கோபால்சாமி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் நடைபெற இருக்கின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய பொறுப்பாளர்கள் விருப்பமனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புதிய மனுவைப் பெற்று தங்களுக்கு தேவையான பொறுப்புகளை எழுதி மாவட்ட தலைவரிடம் ஒப்படைத்தனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் திருப்பூர் வடக்கு அல்லது தெற்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும், சுதந்திர போராட்ட தியாகி நல்ல கண்ணு இரங்கல், பனியன் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு, மத்திய அரசால் உயர்த்தப்பட்ட கேஸ் சிலிண்டர் விலை உடனடியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் நிர்வாகிகள் வி.ஆர்.ஈஸ்வரன், பாகனேரி ரவீந்திரன், ஜெயினுலாபுதீன், சாதிக், ஹாசன், அரிமா வெங்கடேசன், பாபு, தனபால், சரவணன், மகிளா காங்கிரஸ் விக்டோரியா, சம்சாத் பேகம், காஜா, கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், அருள், கதிரேசன் ஜோதி, தேவசாமி, ராமு, சோஜன், கிருஷ்ணதாஸ், சுலைமான், சேக், வேலுச்சாமி, பூபதி, சுந்தர்ராஜ், சண்முகசுந்தரம், பிரதீப், டி.வி.குமார், நடராஜ், முபாரக், சேக் தாவூத், பெப்சி கோவிந்தசாமி மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



