திருப்பூர், மார்ச் 09 –
திருப்பூர் மாநகராட்சி 25 வது வார்டு சோளி பாளையம் பாட்டையப்பன் நகர் அதிக பனியன் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலையை சீரமைத்து புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் அவர்களின் முயற்சியால் மீண்டும் அதே பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே. என் விஜயகுமார் உடனடியாக அப்பகுதியில் தார் சாலைகளை சீரமைக்க வேண்டும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து
அப்பகுதி முழுவதும் தார் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எம் எல் ஏ அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.



