கருங்கல், பிப்ரவரி 28 –
கருங்கல் அருகே உள்ள குறும்பனை பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஆன்டனி தாசன் மனைவி ரோஸ்மேரி (68). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர் பின்னர் அவர் வீடு திரும்பிய போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. ரோஸ்மேரி வீட்டில் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்து 20 கிராம் தங்க நகை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் பணத்தை மர்மம் நபர்கள் திருடியது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ரோஸ்மேரி வீட்டின் வெளியே செல்வதை கண்காணித்து இந்த திருட்டு நடந்துள்ளது.


