புதுக்கடை, பிப். 25 –
புதுக்கடை அருகே உள்ள முன்சிறைப் பகுதியில் சார் பதிவக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். எனவே புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு 1 கோடியே 87 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தது.
பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று குமரி மாவட்டம் வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த கட்டடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் முஞ்சிறை சார்பதிவாளர் அலுவலக புதிய அலுவலக கட்டிடத்தை பத்திர பதிவுத்துறை துணை தலைவர் சுவாமிநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து முதல் பத்திர பதிவு செய்த நபருக்கு உடனடியாக பத்திரத்தை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் பதிவு மாவட்ட பதிவாளர் பூவரசி, மாவட்ட தணிக்கை பிரிவு பதிவாளர் செல்வகுமாரி, முஞ்சிறை சார்பு ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ், முஞ்சிறை பத்திர பதிவு சங்க தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



