கோவை, பிப். 24 –
ஃபிலிம்பேர் நிறுவனம், கேரளா சுற்றுலாத் துறையுடன் இணைந்து 70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவை முதன்முறையாக கொச்சியில் நடத்தியது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய தொழித் திரைப்படங்கள் பங்கு பெற்றன.
இவ்விழாவில் ‘அமரன்’ 8 விருதுகளையும், ‘மெய்யழகன்’ 4 விருதுகளையும் அமரன்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றன. தமிழில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, தெலுங்கில் அல்லு அர்ஜுன், மலையாளத்தில் மம்மூட்டி சிறந்த நடிகர்களுக்கு விருதை வென்றனர். ஆடு ஜீவதம் 5 விருதுகளை வென்றது.
கார்த்தி சிறந்த துணை நடிகருக்கான விருதும் பார்வதி திருவோத்து சிறந்த துணை நடிகைக்கான விருதையும் லப்பர் பந்து படத்திற்காக சுவாசிகாவும் விருதைப் பெற்றார். தங்கலான்’ திரைப்படத்தில் வலிமையான நடிப்பிற்காக விக்ரமுக்கு ‘சிறந்த நடிப்புக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) பிரிவில் ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்திற்காக ஆசிப் அலி மற்றும் ‘ஆடுஜீவிதம்’ படத்திற்காக பிருத்விராஜ் ஆகிய இருவரும் அந்த விருதை பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



