புதுக்கடை, பிப். 23 –
குழித்துறை பகுதி கழுவன்திட்டை ஆர் சி தெருவை சேர்ந்தவர் ரஜினி என்பவர் மகன் ரோகித் (20). பட்டதாரியான இவர் நேற்று தனது அண்ணன் மகன் ஜெபின் என்பவரை பின்னால் அமர வைத்து புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் – சடையன் குழி சாலையில் சென்று கொண்டிருந்தார். சானல்முக்கு என்ற பகுதியில் வரும் போது, எதிரில் வந்த பயணிகள் ஆட்டோ ஒன்று மீது பைக்கை மீது மோதியது. பைக்கை மணிகண்டன் என்பவர் ஓட்டினார். அதில் 4 பயணிகள் காணப்பட்டனர்.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த முழங்குழி பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் (75), அவரது பேரன் நிதிஷ்வன் (8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் என்பவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பைக்கில் பயணம் செய்த வர்களுக்கும், ஆட்டோவில் பயணித்த மற்ற 2 பேருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
காயமடைந்த 3 பேர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த ரோகித் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


